இளைஞரை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

0 720

சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் பைக்கில் வந்த ஹேமநாத் என்பவர் மதுபோதையில் இருந்ததை கண்டறிந்த போக்குவரத்து போலீசார், அபராதம் விதித்து, பைக்கையும் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.

ஹேமநாத் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காவலரின் சட்டையைப் பிடித்தும் இழுத்ததாகக் கூறப்படும் நிலையில், போலீசார் அவரை கீழே தள்ளி எட்டி உதைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

போலீசாரின் தாக்குதலை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிய நிலையில், கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல் நிலை காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments