சென்னை கொடுங்கையூரில் அவதூறாகப் பேசிய திமுக வட்டச் செயலாளரைக் கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

0 667

சென்னை கொடுங்கையூரில் மதரீதியாகப் பேசியதாகக் கூறப்படும் திமுக 35 வது வட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நேற்று கொடுங்கையூரில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற திமுகவினர் இருவர் வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் அதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த திமுக 35வது வார்டு வட்டச்செயலாளர் ஹரிகிருஷ்ணன், வீட்டு உரிமையாளரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலை யில், ஹரிகிருஷ்ணனை முறையாக விசாரிக்காமல் அனுப்பிவிட்டனர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments