பெண்களை ஆபாசமாக காட்டாதீங்க.. மலையாள பெண் கவிஞர் கோரிக்கைக்கு இயக்குனர் சொன்ன “பிட்” ரகசியம்...!

0 741

தமிழ் சினிமாவில் பெண்களை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று கோரிக்கை வைத்த மலையாளப் பெண் பாடலாசிரியரிடம், இன்ஸ்டாகிராமில் பெண்களே தாராளமாக  நடந்து கொள்வதாக தெரிவித்த இயக்குனர் ஆர்.வி உதயகுமார், தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்கும் என்றும், மலையாளிகளுக்கு ஏனோ தமிழர்களை பிடிப்பதில்லை என்று பேசினார்

என் சுவாசமே.. என்ற படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையாள பாடலாசிரியர் ஸ்ரீவித்யா, மலையாள சினிமாவில் தலைசிறந்த படங்களும் படைப்பாளிகளும் இருப்பதாக கூறியதோடு, இந்த படத்தின் இயக்குனரிடம் சினிமாவில் பெண்களை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளிப்பது போல பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார், பாடல் காட்சிகளில் ரசிகர்களை கவர்வதற்காக அப்படி செய்ய வேண்டியதாகி விடுகின்றது என்றும் தங்களை விட இன்ஸ்டாகிராமில் பெண்களே அதிகம் காட்டுவதாகவும் அவர்களை எப்படி நிறுத்த சொல்ல போறீங்க ? என்று சிரித்தபடியே சாடினார்.

மலையாளிகளை தமிழர்களுக்கு பிடிக்கும் என்றும் என்னவோ தெரியவில்லை மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிப்பதில்லை என்று கூறியதோடு , மலையாளம் பல நல்ல சினிமாக்களை வழங்கி இருந்தாலும் , ஆபாசக் காட்சிகள் நிறைந்த படங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் மலையாள சினிமா தான் என்றார்ஆர்.வி உதயகுமார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments