1 வருடமாக எந்த நடவடிக்கையும் இல்லை.. மனுக்களின் ஒப்புகை சீட்டுகளை மாலையாக போட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த விவசாயி

0 447

வேலூர் மாவட்டம்  குக்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி தான் வசிக்கும் பகுதியில் உள்ள அனுப்பு ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு வருடமாக புகார் மனுக்கள் கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் மனுக்களின் ஒப்புகைச்சீட்டுகளை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments