ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 444


ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிப் நகரிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments