பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஜம்முவில் பலத்த பாதுகாப்பு... டிரோன்கள் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களுக்கு தற்காலிகத் தடை

0 462

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஜம்மு வில் டிரோன்கள், பாரா கிளைடர்கள், நீராவி பலூன்கள்,  ரிமோட் மூலம் பறக்கும் இலகு ரக விமானங்கள் போன்றவை பறப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் நேற்று பிறப்பித்துள்ளார். பிரதமரின் வருகை குறித்து உளவுத்துறையினர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சுட்டிக் காட்டியிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் பல்வேறு நலத்திட்டங்கள், புதிய ரயில்திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஜம்முவுக்கு செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments