தனியா வாங்க சந்திக்கலாம்.. சிக்கிய செல்போன் மன்மதன்... செமயா கவனித்த பெண்கள்..!

0 1059

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்களை இரவு நேரம் செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்து வந்த 52 வயது ஆசாமியை, மடக்கிப்பிடித்த பெண்கள் அவரது சட்டையைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோபித்துக் கொண்டு ஓடிய மாப்பிள்ளையை... கார் போட்டு தேடி அழைத்து வருவது போல போலீஸ் நிலையத்துக்கு பெண்களால் சட்டையை பிடித்து கூட்டிச் செல்லப்படும் இவர் தான் செல்போனில் பெண்களிடம் ஆபாசமாக பேசி தொல்லைக்கொடுத்த புகாருக்குள்ளான 53 வயது ரவுசு ராஜேந்திரன்..!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 70 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் பணியாளர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பலர் அந்த போன் நம்பரை பிளாக் செய்து வைத்துள்ளனர்.

அந்த செல்போன் நம்பரை பிளாக் செய்ய மறந்த பெண்களுக்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருந்ததால் பாதிக்கப்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மர்ம நபரிடம் போனில் நைசாக பேசிய பெண் ஒருவர், நேரில் சந்திக்கலாம் என்று நைசாக பேசி அவரை திருப்பத்தூர் அருகே வரவழைத்து மடக்கிப் பிடித்தனர்.

விசாரித்ததில் செல்போனில் பெண் குரலை கேட்டாலே ஆபாச வர்ணனை செய்யும் அந்த ஆசாமி சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் பட்டன் போனில் இருந்து அங்கன்வாடி பெண் பணியாளர்களிடம் பேசியதும் தெரிய வந்தது. உடனடியாக அங்கன்வாடி ஊழியர்கள் அவனைப்பிடித்து உலகம்பட்டி காவல் நிலையத்திற்கு காரில் அழைத்து வந்தனர். காரில் வரும் வழியில் இறங்கி தப்பி ஓட முயன்ற அவனை, அங்கன்வாடி ஊழியர்கள் மடக்கிப் பிடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரவுசு ராஜேந்திரனை கைது செய்த உலகம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி பெண்களின் இந்த துணிச்சலான செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments