சந்தேஷ்காலி நில அபகரிப்பு மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... திரிணமூல் காங் பிரமுகர் கைது

0 434

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் நில அபகரிப்பு மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தொடர்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷிபு பிரசாத் ஹஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இத் தகவலை உறுதிப்படுத்திய அக் கட்சியின் மூத்த தலைவர் குணால் கோஷ், இதன் மூலம் தங்கள் கட்சியின் மீதும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை ஆகிவிடாது என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாஜக தவறான தகவல்களைப் பரப்பிவருவதாகவும், போலீஸ் விசாரணையின் முடிவில் உண்மை வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஷாஜஹான் ஷேக்குக்கு எதிராக இதுவரை எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments