கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு - சீமான்

0 754

கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்ட பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக சீமான் கூறினார்.

சென்னை அண்ணாநகரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த அவர்,

பிரஜா ஐக்கிய கட்சி தமிழகத்தில் போட்டியிட உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்து உள்ளதாகவும், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனித்து போட்டியிட்டு 7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்தால் பூஜ்ஜியம் புள்ளி 7 சதவீதம் வாக்குகள் கூட பெறாது எனவும் சீமான் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments