புதுக்கோட்டையில் நள்ளிரவில் பணம், மது கேட்டு பார் ஊழியருக்கு கத்தியைக் காட்டி கொலை மிரட்டல்

0 463

புதுக்கோட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் பணம் மற்றும் மது கேட்டு பார் ஊழியரை கத்தியால் மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குடி அருகே உள்ள மதுபானக் கடையின் பாரில் கார்த்திகேயன் என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார்.

இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் பணம் மற்றும் மது கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments