செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய திருடர்கள்.. 1 கி.மீ தூரம் ஸ்கூட்டியில் சேஸிங் செய்த இளம்பெண்..!!

0 669

ராசிபுரத்தில் தனது 1 பவுன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்த பைக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்த இளம் பெண் ஒருவர், அவர்களை விடாமல், தனது ஸ்கூட்டியிலேயே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சேஸிங் செய்துள்ளார்.

V.நகர் கிளை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பட்டணத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி நேற்று மாலை 5 மணியளவில் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது மக்கள் நடமாட்டம் உள்ள சிவானந்தா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உதவிக்கு அழைத்தும் யாரும் வராததால், தனது ஸ்கூட்டியில் கொள்ளையர்களை துரத்திச்சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments