மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைப்பு, ஒருவர் பலி - 25 பேர் காயம்

0 381

மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களுடன் தலைமைக் காவலர் ஷியாம் லால் பால் என்பவர் எடுத்த வீடியோ வைரலானது.

இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவரை மீண்டும் பணியமர்த்தக் கோரி 300க்கும் அதிகமானோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சூறையாடி, அருகில் இருந்த பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பதற்றத்தைத் தணிக்க கூடுதல் போலீசார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments