மத்திய அரசுடன் 3ம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

0 451

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 3வது கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், 3வது கட்டப் பேச்சுவார்த்தை சண்டிகரில் நடந்தது.

இதில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடரும் என்று விவசாயி சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், ஹரியானாவில் உள்ள 7 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைக்கான தடையை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments