மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது மத்திய அரசு - முதலமைச்சர்

0 463
மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது மத்திய அரசு - முதலமைச்சர்

மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசு, தமிழகத்துக்கு 2 பெரிய இயற்கை பேரிடர்களுக்கும் நிவாரணத் தொகை தரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது என்ற அளவுக்கு தென் மாநிலங்கள் வளர்ச்சி கண்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஆதிக்கக் குவியலை அகற்றி அடிமைப் பள்ளத்தை நிரப்புவதே தங்கள் மீதான எதிரிகளின் கோபத்துக்குக் காரணம் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments