அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் வீசிய பனிப்புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் ரத்து

0 483

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் வீசிய பனிப்புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பென்சில்வேனியா மாகாணத்தில் நார்ஈஸ்டர் புயல் காரணமாக சாலைகளில் ஒரு அடிக்கு மேல் பனி தேங்கியுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பலத்த காற்று மற்றும் பனி காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மின்சாரமின்றி தவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நியூயார்க் விமான நிலையத்தில் பனிப் படலம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் காத்திருக்க நேரிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments