மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி - மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதல்.. தீவிரமாக தேடி வரும் போலீசார்..!

0 552
மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி - மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதல்.. தீவிரமாக தேடி வரும் போலீசார்..!

பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதி கொண்ட பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்களும் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை, பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்களை தேடி வருகின்றனர். மேலும் வன்முறை, அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்களை, நிரந்தரமாக கல்லூரியை விட்டு நீக்க வேண்டும் என ரயில்வே காவல்துறை சார்பில் அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments