மூன்று மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரில் திடீர் திருப்பம்... பெற்ற தாயே பார்த்த கொடூர வேலை..!

0 658
மூன்று மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரில் திடீர் திருப்பம்... பெற்ற தாயே பார்த்த கொடூர வேலை..!

சென்னை மதுரவாயலில் 3 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக, குழந்தையை அதன் தாயே சடலமாக எடுத்துச் சென்று குப்பையில் வீசிய சி.சி.டி.வி. காட்சியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில், உடல் நலமின்றி குழந்தை இறந்ததால், சடலத்தை வீசியதாக அப்பெண் கூறியதாக தெரிகிறது. 2-ஆம் திருமணம் செய்துள்ள அப்பெண் தான் குழந்தையை கொன்று வீசினாரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, சென்னையின் குப்பைகள் கொட்டப்படும் பெருங்குடி கிடங்குக்குச் சென்று குழந்தையின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments