சாலைத் திருப்பத்தில் வேகமாகத் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன்... ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

0 612
சாலைத் திருப்பத்தில் வேகமாகத் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன்... ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

திருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு பயணிகளுடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சென்று கொண்டிருந்த மகேந்திரா வேன் குறுகலான திருப்பத்தில் வேகமாக வந்து திரும்பியதில் கவிழ்ந்தது.

இதில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிதமான மழை பெய்து கொண்டிருந்த போது சாலை வளைவில் வேகமாகத் திரும்பியதால் வேன் கட்டுப்பாட்டை இழந்தாகக் கூறப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments