மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த நபர் கைது

0 623

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்ததாக தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றை திருட முயன்ற போது சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது, கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதை போக்க சிவனே கூறியதால்தான் செருப்புகளை சேகரித்து கொளுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே பல்லாவரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தீ வைக்கும் சம்பவங்களில் தீனதயாளன் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments