காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'ரப்பர் ஸ்டாம்ப்' போன்று செயல்படுகிறார் - ஆச்சார்யா பிரமோத்

0 345

ஸ்ரீ கல்கி கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடியை நேரில் அழைத்ததால், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட் மோசமாக நடத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது பிரியங்காவும் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இதனை கண்டிக்காமல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்படுவதாகவும் ஆச்சார்யா பிரமோத் சாடினார். ராமர் மற்றும் ராஷ்டிரியத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிய அவர், வாழ்நாள் முழுவதும் பிரதமர் மோடிக்கு துணை நிற்கப்போவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments