குடிநீர் இணைப்பை யாரோ மர்ம நபர்கள் துண்டித்து விட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் ரகளை ஈடுபட்ட போதை ஆசாமி

0 325

பண்ருட்டியை அடுத்துள்ள அம்மாபேட்டை கிராமத்தில், தமது வீட்டுக்கு வரும் குடிநீர் இணைப்பை யாரோ மர்ம நபர்கள் துண்டித்து விட்டதாகக் கூறி புதுப்பேட்டை காவல் நிலையத்தின் முன் நட்ட நடு சாலையில் படுத்துக் கொண்டு குணசேகரன் என்ற நபர் ரகளையில் ஈடுபட்டார்.

மது போதையில் இருந்ததாக கூறப்படும் குணசேகரன், மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு நடந்தே சென்று ரிட் மனு தாக்கல் செய்யப் போவதாக தொடையைத் தட்டி சவால் விடுத்தார்.

நீண்ட நேரம் கூச்சலிட்டும் போலீசார் கண்டு கொள்ளாததால் தமது மனைவியுடன் அந்நபர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments