சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

0 574

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், ஏற்கனவே மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலில் இல்லை என்றும், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  " பள்ளி பாதுகாப்பு பகுதி" என்ற புதிய திட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தொடங்கி வைத்த சந்திப் ராய் ரத்தோர், வெடிகுண்டு மிரட்டல்கள் வதந்தியாகவே இருப்பதால் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments