வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்: இபிஎஸ்

0 429

ஸ்பெயினில் உடன்பாடு ஏற்பட்டுள்ள 2 நிறுவனங்களின் அலுவலகம் சென்னை மற்றும் பெருந்துறையில் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று கையெழுத்திட்டது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

20 நாட்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் செலவிட்டு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஸ்பெயின் முதலீட்டாளர்களை அழைத்திருக்கலாமே என்று கூறிய அவர், ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments