அமெரிக்கா துல்லிய தாக்குதலில் கட்டாய்ப் ஹெஸ்பொல்லா அமைப்பின் தளபதி உள்பட 3 பேர் பலி

0 450

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய ட்ரோன் மூலமான துல்லிய தாக்குதலில் சிரியாவைச் சேர்ந்த கட்டாய்ப் ஹெஸ்பொல்லா அமைப்பின் தளபதி அபு பக்கர் அல்-சாதி உள்பட 3 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தளபதியின் மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. ஜோர்டானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான அமைப்பினரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments