உதகை அருகே கட்டுமானப் பணியின்போது பயனற்ற கட்டடம் இடிந்து விழுந்தது , இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு

0 585

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக பள்ளம் தோண்டியபோது, அருகிலிருந்த பயனற்ற பொது கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட வந்த நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments