நாடு பெருங்கடனில் இருப்பதால் புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியவில்லை - மாலத்தீவு அதிபர்

0 418

நாடு பெருங்கடனில் இருப்பதால் புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு அறிவித்துள்ளார்.

அடுத்த 2 மாதங்கள் மாலத்தீவுக்கு மிகக் கடினமான காலகட்டமாக இருக்கும் என்றும் குராய்தூ என்ற தீவுப் பகுதியில் பேசிய முய்ஸு கூறியுள்ளார்.

ஜூலைக்குப் பின் நிலையை சரி செய்யும் வகையில், வருமானத்தை அதிகரிப்பதற்கான பணிகளை தமது அரசு மேற்கொண்டு வருவதாகவும் முய்ஸு குறிப்பிட்டுள்ளார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்ஸு ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவுடனான உறவுகளில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments