சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்

0 429

சிரிய ராணுவ நிலைகள் மற்றும் விமானப் படை தளங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாகின. சிரியாவில் 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில், அதிபர் பஷர் அல் அஸாத்துக்கு பக்கபலமாக இருந்துவரும் ஈரான் ஆதரவு போராளி குழுக்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம், ஹமாஸுடன் போர் தொடங்கியது முதல் சிரியா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments