காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.72 லட்சத்துடன் ஓட்டுநர் தலைமறைவு

0 811

புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் நெடுஞ்சாலை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரொக்கத்தை திட்டமிட்டு கொள்ளையடித்து, காட்டுப்பகுதியில் புதைத்துவைத்த வழக்கில் இருவரை கைது செய்த போலீசார், 72 லட்சம் ரூபாய் ரொக்கத்தை 24 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் பாண்டி என்பவர் கொடுத்து அனுப்பிய பணத்தை காரில் எடுத்துச்சென்ற மேற்பார்வையாளர் சதீஷ்குமார் மற்றும் உதவியாளர் கார்த்திக் ஆகியோர் கழிவறைக்கு சென்ற போது, காரை பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு, பணத்துடன் தலைமறைவான ஓட்டுநர் லட்சுமணன் மற்றும் அவருக்கு உதவிய ராமர் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

லட்சுமணனிடமிருந்து பெற்ற பணத்தை காட்டுக்குள் புதைத்து வைத்ததாக செல்வமணி, சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments