மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவை வல்லரசாக்குவார்: அண்ணாமலை

0 437

மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தி.மு.க. எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்த ரெய்டில் அவர் ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தான் நீட் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு ரகசியமே அடங்கி உள்ளதாக கூறினார்.

டாஸ்மாக்கில் கொள்முதல் செய்யப்படும் மதுவில் 44 சதவீதம் ஜெகத்ரட்சகன் மற்றும். டி.ஆர்.பாலுவின் ஆலையிலிருந்து தான் செல்கிறது எனவும் அண்ணாமலை கூறினார்.

6 முறை ஆட்சியில் இருந்த தி.மு.கவால் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே கொண்டு வர முடிந்தது, ஆனால், 17 தனியார் மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து அதன் மூலமாக மருத்துவ சீட்டுகளை விற்பனை செய்ததாக கூறிய அண்ணாமலை, தாங்கள் பணம் சம்பாதிக்கவே நீட்டை ஒழிக்க வேண்டுமென தி.மு.கவினர் கூறி வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments