சுகாதாரத்துறையில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 448

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 251 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 983 மருந்தாளுநர் பணியிடங்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments