ஜம்மு காஷ்மீரில் பலத்த பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிப்பு

0 377

ஜம்மு காஷ்மீரில் டோடா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த பனிமழை பொழிந்து வருகிறது. மலைச்சிகரங்களையும் பனிமூடியுள்ளது. இதன் காரணமாக வரலாற்று பிரசித்தி பெற்ற மொகாலயர் சாலை மூடப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

இதே போன்று இமாச்சலப் பிரதேசம் மணாலி போன்ற பகுதிகளிலும் தொடர்ந்து பனிமழை பெய்து சாலைகளை பனிப்போர்வை மூடியதால் 475 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments