என் மண், என் மக்கள்" யாத்திரையில் அண்ணாமலை பேச்சு

0 513

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு சம்பளம் இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய அண்ணாமலை, காவல்துறைக்கு 8 மணி நேர வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தால் இதுநாள் வரை அரசு வேலை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் கற்றால்தான் எதிர்காலத்தில் பெரிய ஆளுமையாக வர முடியும் என்று கூறிய அண்ணாமலை, பாஜக ஆட்சியில் 2 மொழிகள் மதிப்பெண்களுடனும் 3 மொழிகள் மதிப்பெண்கள் இல்லாமலும் என 5 மொழிகள் கற்பிக்கப்படும் என்றார்.

2026ஆம் ஆண்டில் பாஜகவைத் தேர்ந்தெடுத்தால் மூன்று ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடிவிட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments