ஜார்க்கண்ட்டில் 48 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் இன்று பலத்தை நிரூபிக்கிறார் முதலமைச்சர் சம்பய் சோரன்

0 377

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் பதவியில் இருந்து
விலகியதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற சம்பய் சோரன் சட்டமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தமது பலத்தை நிரூபிக்க உள்ளார்.

இதனால் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தங்க வைக்கப்பட்ட ஆளும் கட்சியின் 39 எம்.எல்.ஏக்கள் விமானம் மற்றும் சிறப்பு பேருந்துகளின் மூலம் ராஞ்சிக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு 48 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 29 எம்.எல்.ஏக்களே ஆதரவுள்ள நிலையில் இன்றைய வாக்கெடுப்பில் ஜே.எம்.எம். கூட்டணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments