போலீஸ் விசாரணைக்கு அஞ்சி ஓடி ஒளிவது ஏன்? எதிர்கொள்ள தயக்கம் ஏன்? - பாஜக

0 484

 

டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 25 கோடி ரூபாய் பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை திங்கள் கிழமைக்குள் அளிக்குமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி நிர்வாகி ஜாஸ்மின் ஷா, வெறும் வெள்ளை பேப்பரில் விளக்கம் கேட்டு நோடீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

ஆம் ஆத்மி கட்சி புகாருக்கு பதிலளித்த பாஜக எம்.பி. கவுதம் கம்பீர், போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளாமல் ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

விசாரணையை எதிர்கொண்டு உண்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments