சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் நாட்டு மீன்பிடிக் கப்பலை மீட்ட இந்திய கடற்படை

0 813

சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீண்டும் ஒரு ஈரான் நாட்டு மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ஷார்தா போர்க்கப்பல் மீட்டது.

அத்துடன், பிணைக் கைதிகளாக கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த ஈரான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சோமாலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த எஃப்.வி. ஒமாரி என்ற ஈரான் நாட்டுப் படகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் செயல்பாடுகள் இருந்ததை அடுத்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியப் போர்க்கப்பல் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments