அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. காதலனால் வீதிக்கு வந்த மகள்..! வருந்தினேன் திருந்தினேன் என வீடியோ..!
சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ராஜ்கிரணுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த வளர்ப்பு மகளை, காதல் கணவன் கைவிட்டு சென்ற நிலையில், ராஜ்கிரணிடம் மன்னிப்புக் கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
சின்னத்திரையில் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் முனீஷ்ராஜா.
கடந்த 2022ஆம் ஆண்டு இவர் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜ்கிரண், தனது வளர்ப்பு மகளை ஏமாற்றி அழைத்துச்சென்றுள்ள முனீஸ்ராஜா ஒரு மோசடி பேர்வழி என்றும் அவனை நம்பி, தங்கள் மீது புகார் அளித்துள்ள பிரியா தனக்கு மகளே அல்ல என்றும் நெஞ்சம் உருக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்
2 ஆண்டுகள் கூட இந்த காதல்ஜோடி ஒன்றாக சேர்ந்து வாழாத நிலையில் பிரியாவை முனீஸ்ராஜா கைவிட்டு சென்று விட்டதாகவும், தற்போது பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் வீடியோ வெளியிட்டுள்ள பிரியா, தனது திருமணம் செல்லாது என்றும் தனக்கு ஆபத்து என்றதும் தனது தந்தை ராஜ்கிரண் ஓடி வந்து தனக்கு உதவியதாகவும், தான் செய்த தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்
காதல் விவகாரங்களில் பிள்ளைகள் கெட்டுப்போக வேண்டும் என்று பெற்றோர் ஒரு போதும் நினைப்பதில்லை, அதையும் மீறி தறிகெட்டு சென்று ஏமாந்து நிற்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் மட்டுமே ஒரே ஆறுதல் என்பதற்கு ராஜ்கிரன் வளர்ப்புமகளின் காதல்வாழ்வே சாட்சி..!
Comments