சரக்குக் கப்பல்களை கடத்த முயன்ற சோமாலிய கொள்ளையர்கள் சதி முறியடிப்பு... அடுத்தடுத்து 3 கப்பல்களை மீட்டது இந்தியக் கடற்படை

0 665

அரபிக் கடலில் அடுத்தடுத்து 3 கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்டுள்ளன.

சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக்காக பன்னாட்டு கப்பல்களுடன், 10 இந்திய கடற்படைக் கப்பல்கள் அப்பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றபோது, இந்திய கடற்படைக் கப்பலான சுமித்ரா விரைந்து சென்று 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.

இதே போன்று ஈரானிய மீன்பிடிப் படகையும் இந்தியக் கடற்படையினர் சோமாலிய கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பல் சிசெலஸ் அருகே தாக்கப்பட்டதை அறிந்து இந்தியக் கடற்படை விரைந்து சென்று 9 குழுவினருடன் மீட்டது. 3 கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments