மருத்துவமனையில் பதுங்கியிருந்த 3 ஹமாஸ் போராளிகள் சுட்டுக்கொலை

0 565

பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு கரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகள் 3 பேரை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது பெரியளவில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக, வெளிநாட்டில் இயங்கிவரும் ஹமாஸ் தலைமையகத்துடன் இணைந்து அவர்கள் சதித்திட்டம் தீட்டிவந்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது முதல் மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்களும், தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments