ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல் -25 பேர் காயம்

0 565

அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழக்க காரணமான ட்ரோன் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

சிரியா - ஜோர்டான் எல்லையில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்த தருணத்தில், அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்றும் முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்ததால் குழப்பம் ஏற்பட்டு போராளிகளின் ட்ரோனை சுட்டு வீழ்த்த தவறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments