இடம் உள்ளவர்களுக்கு மட்டுமே மாடு வளர்க்க உரிமம் வழங்க ஆலோசனை - ராதாகிருஷ்ணன்

0 557

சென்னையில் தெருவை நம்பி மாடு வளர்க்கக் கூடாது என்றும், இடம் உள்ளவர்களுக்கு மட்டும் மாடு வளர்க்க உரிமம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் கொசு மருந்து தெளிக்கும் பணியைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இப்பணியில் வனவிலங்கு ஆர்வலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments