வடகொரியா ஏவுகணைச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுவதாகத் தென்கொரியா தலைமை அதிகாரி லீ சுங்-ஜுன் தகவல்

0 567

வடகொரியா தனது மேற்குக் கடல் பகுதியில் உள்ள போர்க் கப்பல்களில் இருந்து பல ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்குள் மூன்றாவது முறையாக ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைமை அதிகாரி லீ சுங்-ஜுன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments