விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்

0 572

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செம்மலை பகுதியிலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றுக்குள் காட்டெருமை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால், வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தி அதனை மயக்கமுறச் செய்து, பின்னர் கயிறு கட்டி கிரேன் மூலம் மேலே தூக்கினர்.

மேலே வந்ததும் மயக்கத்தை தெளிய வைக்கும் ஊசி செலுத்தப்பட்ட காட்டெருமை, தட்டுத்தடுமாறியபடி நீண்ட நேரத்துக்குப் பிறகு வனத்துக்குள் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments