ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தை முகாமிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்

0 663

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் சோதனையிட சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் அங்கு இல்லாததால் அங்கு முகாம் அமைத்து நாள் முழுக்க காத்திருந்தனர்.

வீட்டில் இருந்த பிஎம் டபிள்யூ கார் மற்றும் சில ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு  நாளை ஆஜராவதாக ஹேமந்த் சோரன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு பயந்து ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்குத் தொடர்பாக ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments