வீட்டு வசதி வாரியத்தின் 3,000 வீடுகள் விற்பனையாகவில்லை: அமைச்சர் முத்துசாமி

0 685

வீட்டு வசதி வாரியம் கட்டி விற்கும் வீடுகளின் விலை தனியாரை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் விற்கப்படாமல் உள்ள 3 ஆயிரம் வீட்டு வசதி வாரிய வீடுகளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விற்பனையாகாத வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments