மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் நண்பன் என்றும் பாராமல் கொலை செய்தவன் கைது.

0 867

அணைக்கட்டு அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த கெளதமனும், கூலி தொழிலாளியான கார்த்திக்கும் நன்பர்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்றும் ஞாயிறு இரவு எதேச்சையாக சந்தித்துக் கொண்ட போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது மதுபோதையில் இருந்த கார்த்திக், கௌதமனின் தாயாரை தொலைபேசியில் அழைத்து, உனது மகனை கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவுதமனை குத்தியதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற தாய், தந்தையரின் மடியில் சரிந்து கெளதமன் உயிரை விட்ட நிலையில், போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments