உணவகத்தில் பார்சல் வாங்கிக் கொண்டு தனது வழக்கமான பாணியில் ஏமாற்ற நினைத்த நபர் கைது

0 1622

சென்னை, ராமாபுரம் அருகே ஃபாஸ்ட் ஃபுட் கடையில் பார்சல் பெற்றுக்கொண்டு, பணம் எடுத்துவர மறந்துவிட்டதாகவும், வீட்டு வாருங்கள் தருகிறேன் என  ஊழியரை அழைத்துச் சென்று அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்ற நசீர் கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தன்னுடன் வரும் ஊழியரிடம் ஏதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பை காட்டி, இதுதான் தனது வீடு எனக்கூறி, மேல் தளத்தில் வசிப்பவர்களுடன் பேசவேண்டும் என ஊழியரின் செல்போனை வாங்கி பேசியபடி, அவரை மட்டும் மேலே அனுப்பிவிட்டு, செல்போனுடன் ஓட்டம் பிடிப்பதை நசீர் கான் வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments