மூன்று மிகப்பெரிய போர் ஒத்திகைகளை நடத்த இந்திய விமானப்படை திட்டம்

0 968

யுத்தகாலங்களில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான மூன்று மிகப் பெரிய பயிற்சிகளில் இந்திய விமானப்படையினர் ஈடுபட உள்ளனர்.

முதலாவாதாக பிப்ரவரி 17ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமரில் வாயுசக்தி என்ற பெயரில்  போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் பங்கேற்க உள்ளன.

இரண்டாவதாக ஏப்ரல் மாதத்தில் ககன்சக்தி என்ற யுத்தப்பயிற்சியில் அனைத்து இந்திய போர் விமானங்களும் லடாக் முதல் இந்தியப் பெருங்கடல் வரை பல்வேறு இடங்களில் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன.

மூன்றாவதாக தரங் சக்தி என்ற ஒத்திகை பல்வேறு நாடுகளின் போர் விமானங்களுடன் கூட்டுப் பயிற்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments