காலாவதி பாஸ்போர்ட், உரிய விசா இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்த நைஜீரிய நபர் கைது

0 667

உரிய விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டு நபர் கோயமுத்தூரில் கைது செய்யப்பட்டார்.

எம்மா என்ற இமானுவேல் என்பவர் மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் முறையாக அளிக்காத நிலையில், நேரில் விசாரணை நடத்தி போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் தங்கி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று டி-ஷர்ட்களை மலிவு விலைக்கு வாங்கி நைஜீரியாவிற்கு ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments