டிரம்ப் மீது பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.700 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

0 733

பெண் பத்திரிகையாளரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சுமார் 700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 80 வயதாகும் ஜீன் கரோல், தொண்ணூறுகளின் மத்தியில் டிரம்ப் தம்மை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். கரோல் யாரென்றே தனக்கு தெரியாது என கூறிய டிரம்ப், தான் எழுதிய புத்தகம் விற்க வேண்டும் என்பதற்காக கரோல் இவ்வாறு பேசிவருவதாக விமர்சித்தார்.

டிரம்பால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக் கூறி, குறைந்தது 80 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கேட்டு கரோல் தொடர்ந்த வழக்கில், சுமார் 700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மான்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments