பாஜக ஆதரவுடன் ஓரிரு நாட்களில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகிறார்.?

0 729

பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்குகிறது.

பீகார் மாநில பாஜக பொறுப்பாளர் வினோத் தாவ்டே கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் எந்தக் கதவும் நிரந்தரமாக மூடப்படுவதில்லை என்று பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் நிதீஷ் குமார் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவுடன் 2 துணை முதல்வர்களுடன் புதிய அரசு பதவியேற்பது குறித்து அக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments